திங்கள், 13 ஏப்ரல், 2020

வாழ்க்கை

பரமபதத்தில் சுழன்றிடும்
தாயகட்டையே மனிதன்,
சிறிது தவறினும்
மீண்டும் மீழ்வது கடினம்.





தனிமை

மூன்றெலுத்துக்கு சொந்தம்
காதல் மட்டுமல்ல
பிரிவும்தான்.

அறிவுரை

புளித்திடும் கனிகளுக்கு
இனிக்கவைக்கவும்
தெரியும் சுவைத்தால்!

காதல்

சொல்லும் வரை
பொக்கிஷம்
சொல்லிய பின்
பாரம்
சுமப்பது யாரோ
அதன்படியே
பாரமும் இனிமையானது!

துரோகம்

நீ சிந்திடும்
ஒவ்வொரு பூக்களையும்
நானே பரிக்க முயன்றேன்
ஆனால் கிடைத்தது
வெரும் முட்களே!

காதல் கடிதம்

தினமும் பூக்கும் பூவைபோல்
பூத்துகொண்டே இருப்பேன்,
நீ என்னை தலையில்
சூடும் வரை!

தூது

செய்தி வரும் என காத்திருந்த
தபால் பெட்டிக்கு,
எதற்காக காத்திருக்கிறோம்
என்பதே மறந்ததாம்!

தோழி

உன்வாழ்வில் பல சந்தோசங்கள் இருக்கலாம்
ஆனால் உன்னை தேடி வந்த
சந்தோசத்திற்கு நீ மட்டுமே
சந்தோசம்!

கனவு

கற்பனை காவியத்தின்
கைவரிசையாள்
கண்இமைகள் திறக்கமறுக்குதே!